நேதாஜியின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மா.சுப்பிரமணியன் அவர்கள் மாலையணிவித்து மரியாதை..!
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள நேதாஜியின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலை போராட்ட வீரரும், வங்கத்துச் சிங்கம், இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று மக்களால் அன்புடன் அழைத்துப் போற்றப்படும் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 126-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது வீரத்தை போற்றி பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் தங்களது இணைய பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். … Read more