தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை பணியை தொடங்கக்கூடாது….. அன்புமணி கோரிக்கை…!!

மேகதாது அணை குறித்த கர்நாடக திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், அணை கட்டப்படும் இடத்தில் தமிழக அரசு அனுமதி இல்லாமல் எந்த பணிகளையும் தொடங்கக்கூடாது என்றும், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிக்கொண்டு இருப்பதாகவும் விரைவில் நல்ல முடிவை ராமதாஸ் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.