இந்தியா மீது மலேசியா கடுமையான விமர்சனம்.. இறக்குமதியில் கையை வைத்து அதிரடி காட்டிய இந்தியா.. அதிர்ந்து போன மலேசியா…

அண்மையில் காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக  மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். மலேசிய இறக்குமதிப்பொருள்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதித்து அதிரடி. இந்த விமர்சனத்திற்க்கு  இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மத்திய அரசு  கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த இறக்குமதி தடையால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் … Read more

பரதிய ஜனதா அரசை இன்று கண்டித்து நாடு முழுவதும் இன்று ‘பாரத் பந்த்’.. வண்டிகள் ஓடாது..கடைகள் திறக்காது..

மத்திய பாரதிய ஜனதா அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் இனைந்து  ஜனவரி 8 அதாவது நாளை நாடு தழுவிய அளவில் “பாரத் பந்த்” நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு. இந்த பாரத் பந்த் குறித்து அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள், மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து இன்று  நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

ஜே.என்.யு பல்கலைகழக மாணவர்கள் விவகாரம்… போராட்டத்திற்க்கு பிரபல பாலிவுட் நடிகை நேரில் சென்று ஆதரவு..

தலைநகர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று  நடந்தது. அப்போது, அங்கு முகத்தை மூடி துனியை  அணிந்து வந்த மா்ம நபர்கள் இரும்பு கம்பி, கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களால்  மாணவர்களை சரமாரியாக கொடூரமாக  தாக்கினர்.      இந்த கொடூர  தாக்குதலில் பல மாணவர்கள்  காயம் அடைந்தனர். இந்த மாணவர்கள் மீதான இந்த கொலைவெறி தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. இந்த … Read more

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர காலில் விழுந்த காவல் கண்காணிப்பாளர்… அதிரவைக்கும் சம்பவம்..

ஆந்திர மாநிலத்தில் புதிதாக முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ஆந்திராவின் தலைநகராக அமராவதி இருக்காது என்றும்  ஆந்திராவிற்க்கு மூன்று தலைநகரம் உருவாக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமராவதியை தலைநகரமாக அறிவிக்கக்கோரியும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த   போராட்டத்தில்  ஈடுபட்ட  பெண்கள் மீது காவல் துறையினர்  தாக்குதல் நடத்தியதாகவும், பெண்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதியில் காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் யாரும்  ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என அமராவதியில் முடிவு … Read more

ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு 110ஐ தொட்டது.. தூக்கி வாரி போடும் திடுக்கிடும் தகவல்கள்..

ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங்குழந்தைகள்  அதிக அளவில் உயிரிழப்பதாக புகார்கள்  வந்தன. இதையடுத்து, மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் குழந்தைகள் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த  டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 குழந்தைகள் பிறந்த உடனே உயிரிழப்பதாக அந்த விசாரனை அமைப்பு  அளித்த அதிர்ச்சி தகவல் தற்போது  வெளியாகி உள்ளது.இந்த உயிரிழப்பிற்க்கு காரணம் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் … Read more

இந்தியா மீது தாக்குதல் நடத்தியவர் ஈரான் தளபதி சுலைமானி.. டிரம்ப் புதிய குண்டு.. இந்திய அரசு மவுனம்…

ஈரானின் இராணுவ தளபதியாக இருந்த குவாசெம் சுலைமானி அமெரிக்காவின் ஏவுகனை  தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவையும் சேர்க்கும் அமெரிக்கா. இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதாவது, சுலைமானியை கொன்றதன் மூலம், அவரது பயங்கரவாத சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்றும், சுலைமானியின் பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது என்றும் ட்ரம்ப் கூறினார். மேலும் இந்த தாக்குதல் போர் ஏற்படுவதற்க்கு அல்ல, போர் ஏற்படாமல் இருப்பதற்க்கு என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர், … Read more

இந்தியா எங்கள் நாடும் இல்லை.. நாங்கள் இந்தியரும் இல்லை.. சீமான் இந்திய ஒருமைப்பாட்டை உடைக்கும் பேச்சு…

இந்தியா எங்கள் நாடு இல்லை,  சென்னையில் தடாலடி . சீமானின் சர்ச்சை கருத்து. பாரத மாதா கீ ஜே என்பவர்களே இந்தியாவில் வாழ முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இது தொடர்பாக சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில், நாங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் அல்ல. தமிழ்த் தாயின் பிள்ளைகள் நாங்கள். எங்களால் பாரத் மாதா கீ ஜே என சொல்ல மாட்டோம், தமிழ்த்தாய் வாழ்க என்றே கூறுவோம். இந்தியாவில் பிரதேசங்களுக்கு … Read more

மகாத்மா காந்தியின் சிலை கபலீகரம்.. அடித்து நொருக்கி அட்டூழியம்.. கயவர்களை கைது செய்யுமா காவல் துறை..

இந்திய தேச தந்தையின் சிலையை சிதைப்பு. இந்திய மக்களிடையே பெரும் பரபரப்பு. இந்திய தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் சிலை தகர்க்கப்பட்டது இந்திய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அம்ரேலியில் மகாத்மா காந்தியடிகள் சிலையை சமூக விரோதிகள் தகர்த்துள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. அம்ரேலி மாவட்டத்தில்  ஹரி கிருஷ்ணா என்ற ஏரியில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை சூரத் தொழிலதிபர் ஒருவரின் அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையை … Read more

பாகிஸ்தானின் குருத்வாராவில் கொலைவெறி தாக்குதல்.. இந்திய அரசு கடும் கண்டனம்.. இந்திய தலைவர்களும் கடும் கண்டனம்..

பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாராவில் கொலைவெறி தாக்குதல். இந்திய தலைவர்கள் கடும் கண்டனம்.      சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான சீக்கிய மதகுருவான  குருநானக் சிங், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு அவருக்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. அங்கு முக்கிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் நேற்று அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய … Read more

சித்திகரிக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து சிக்கலில் சிக்கிய புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி..

தவறான  வீடியோவை பகிர்ந்த புதுச்சேரி ஆளுநர். புதுச்சேரி ஆளுநரை புரட்டியெடுக்கும் நெட்டிசங்கள். நாம் அனைவரும் சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட  ஊடகங்கள் வழியாக கிடைக்கும் தகவல்களை, சிறிதும்  யோசிக்காமலும், சரிபார்க்காமலும்,  உண்மை என நம்பி, அப்படியே அதனை பிறருக்கும்  பரப்புவதை, பலரும் செய்கின்றனர்.இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், சூரியனில் இருந்து வெளிப்படும் சப்தமானது  ஓம் என்ற ஒலியுடன் ஓம் மந்திரத்தை … Read more