டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது – ராமதாஸ்

முதன்மை தேர்வுகளுக்கும் இடையே 9 மாத இடைவெளி மிகவும் அதிகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்.  டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும். நவம்பர் மாதத்தில் முதல் நிலைத் தேர்வு, 2024 ஜூலையில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது, டி.என்.பி.எஸ்.சி அடுத்த ஆண்டு மிகக்குறைந்த … Read more

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியீடு. ஐஏஎஸ் மற்றும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டு, அதற்கான அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அதன்படி, ஐஏஎஸ்,  குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளில் ஊக்கத்தொகை பெற தகுதிவாய்ந்த 39 மாணவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியீடு! – டி.என்.பி.எஸ்.சி

குரூப் 4 தேர்வு அடுத்த மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் தகவல். தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இத்தொடர்பாக பேசிய அவர், குரூப் 4 தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும். இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகள் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அனைத்து … Read more