#BREAKING: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஐகோர்ட் கிளை உத்தரவு

மாஜிஸ்திரேட் முன் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி உயர்நீதிமன்ற கிளையில் வாக்குமூலம் அளித்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி இன்று இரண்டாவது முறையாக உயர் நீதிமன்றம் மதுரை கிளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜியுடன் இருப்பது நான் அல்ல என்று … Read more

கோகுல்ராஜ் வழக்கு; ஐகோர்ட் கிளையில் இரண்டாவது முறையாக சுவாதி ஆஜர்!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி ஆஜர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டாவது முறையாக ஆஜரானார். கடந்த 25-ஆம் தேதி சுவாதி ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் இன்று மீண்டும் ஆஜரானார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன் சுவாதி ஆஜராகியுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் கடந்த 25-ஆம் தேதி … Read more

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு; 10 பேரின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது – நீதிமன்றம் உத்தரவு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் -க்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க இயலாது என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் வழங்குவது பற்றி முடிவெடுக்க இயலாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரியும், ஜாமீன் கோரியும் தாக்கல் … Read more

என் மகனின் நிலை யாருக்கும் வரக்கூடாது – கோகுல்ராஜின் தாயார் உருக்கம்!

கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டதில், சந்திரசேகரன், ஜோதிமணி ஆகிய இருவர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 15 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை பிப்.9ல் நிறைவுபெற்ற நிலையில், கோகுல்ராஜ் ஆணவப் … Read more