#Breaking:முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார்!

ஹைதராபாத்:முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். முன்னாள் தமிழக ஆளுநரும்,ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார்.ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட 88 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக ஹைதராபாத்தில் காலமானார். மறைந்த ரோசய்யா அவர்கள் 2011-16 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக ஆளுநராக இருந்தார்.மேலும்,ஆந்திர மாநில முதல்வராக 2009 – 10 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.