போலி ட்விட்டர் கணக்கு- நடிகர் செந்தில் புகார்..!

தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அவதூறு பரப்புவதாக நடிகர் செந்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் செந்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில்,  தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அதன்முலம் தமிழக அரசு மீது அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக புகார் தெரிவித்தார். மேலும், தன் பெயரில் உள்ள போலி டுவிட்டர் கணக்கை நீக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.