அப்துல் கலாம் விரும்பிய மனிதசமுதாயம் அமைக்க உறுதியேற்போம்-மு.க.ஸ்டாலின் பதிவு

இன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு  தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், தமிழும்,அறிவியலும் அவர் இரு கண்கள்.இளைஞர்களும், மாணவர்களும் அவரது நம்பிக்கைகள். அவர் விரும்பிய மனிதசமுதாயம் அமைக்க உறுதியேற்போம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற கலாம் வழி நடப்போம் என்று பதிவிட்டுள்ளார்.