பட்டாசு வெடித்து விபத்து – பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு!
மோகனுர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு. நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் பட்டாசு கடை உரிமையாளர் தில்லைக்குமார் மற்றும் மூதாட்டி பெரியக்காள் (73) ஆகிய 2 பேர் உயிரிழந்திருந்த நிலையில், படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தில்லைக்ககுமாரின் தாயார் உடலும் இடிபாடுகளுக்குள் இருந்து தற்போது மீட்க்கப்பட்டுள்ளது. … Read more