சினிமா தயாரிப்பாளர் மழைக்கு பலி..,

கர்நாடகாவில் தென்கனரா மாவட்டம்,  பெல்தங்கடி அருகே உள்ள எருமாள் நீர்வீழ்ச்சியில் திரைப்பட சூட்டிங் நடைபெற்று வந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சந்தோஷ் ஷெட்டி என்பவர்  நடத்தி வந்தார். நேற்று  சூட்டிங் நடந்து கொண்டிருந்த போது பெய்த பலத்த மழையால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதில் சிக்கி கொண்ட சந்தோஷ் ஷெட்டி நீரில் அடித்து செல்லப்பட்டார். பல மணி நேரத்திற்குபின் சந்தோஷ் ஷெட்டி சடலம் கரை ஒதுங்கியது.

வியர்வை துர்நாற்றத்தால் அவதி பாடுபவரா ? இதனை செய்யுங்கள்..,

கோடை காலங்களில் பல நபர்களின் உடம்பில் இருந்து வரும் வியர்வை அதிக துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.இதனால் அவரின் அருகில் செல்லவே தயங்குவார்கள்.இதனை  இயற்கை முறையில் சரி செய்யலாம். 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை அக்குளில் தடவி சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தினமும் குளிக்கும் முன் ஒரு துண்டு எலுமிச்சயை அக்குளில் தேய்த்து அது நன்கு காய்ந்த பின்பு குளிக்க வேண்டும். இப்படி … Read more