பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில், பலியான அரசு பேருந்து நடத்துனரின் மனைவி கலெக்டரிடம் மனு…!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில், பலியான அரசு பேருந்து நடத்துனர் சிவகுமாரின் மனைவி செளந்தரி தனக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம், தனது கைகுழந்தையோடு மனு அளித்தார்.அவருடன் அவரது உறவினர்களும் வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முறையிட்டனர்.

மதுரை ஆட்சியர் திடீர் ஆய்வு : மாநகராட்சி ஊழியர்களுக்கு எச்சரிக்கை

கலெக்டர் வீரராகவராவ் டெங்கு காய்ச்சலை தடுக்க  தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் பொருட்டு  அரசு ஊழியர் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த டி.ஆர்.ஓ. காலனியில் நேற்று காலை 7.30 மணிக்கு திடீர் ஆய்வு நடத்தினார். இதில்  பல இடங்களில் சாக்கடை தேங்கி நிற்பதை கண்டார். அதில் கொசு உற்பத்தியாகி இருந்ததை கண்டதும், மாநகராட்சி ஊழியர்கள் வேகமாக வந்து கொசு ஒழிப்பு மருந்தை ஊற்றினர். உடனே கலெக்டர் கோபத்துடன் “நான் பார்த்த பிறகு, என் கண்முன் மருந்து ஊற்றி சமாளிக்கும் … Read more