நாகர்கோவிலில் கரடி தாக்கி தொழிலாளி ஒருவர் காயம்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கரடி தாக்கி தொழிலாளி ஒருவர் காயம் அடைந்தார். ஞானசேகரன் என்பவர் கீரிப்பாறையில் உள்ள கிராம்பு தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென வழிமறித்த கரடி ஒன்று அவரை தலையில் பலமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்து சாலையில் விழுந்து கிடந்த ஞானசேகரனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தன