தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” -வானிலை ஆய்வு மையம்

இன்று தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.