துப்பாக்கி சூடு சம்பவம்: தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. தூத்துக்குடியில் இன்று ஆய்வு..!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் தீவைப்பு மற்றும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் அவர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் பதியப்பட்டன. தூத்துக்குடி கலவரம் தொடர்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. … Read more