#T20 WorldCup 2022: அரையிறுதிக்கு தகுதி பெறுமா? இங்கிலாந்து! டாஸ் வென்று இலங்கை அணி முதலில் பேட்டிங்.!

டி-20 உலகக்கோப்பையில் இன்று இங்கிலாந்து-இலங்கை போட்டியில் அணி டாஸ் வென்று இலங்கை முதலில் பேட்டிங்.

ஆஸ்திரேலியாவில் ஐசிசியின் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து அணி மட்டும் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னியில் மோதுகின்றன. இலங்கை அணி அரையிறுதியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வென்றாலே அரையிறுதிக்கு முன்னேறிவிடும், மாறாக இலங்கை அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெறும்.

ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திலும், இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும் இருக்கிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும். இன்று வாழ்வா சாவா போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கையுடன் மோதுகிறது.

டாஸ் வென்று இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு,

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர்(w/c), அலெக்ஸ் ஹேல்ஸ், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், டேவிட் மாலன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்

இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(வ), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்சா, தசுன் ஷனகா(சி), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, மஹீஸ் தீக்ஷனா, லஹிரு குமாரா, கசுன் ராஜிதா 

author avatar
Muthu Kumar

Leave a Comment