டி-20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் தகுதிச்சுற்றுப்போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது, இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்திருக்கிறது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 40 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலிய அணி, தனது முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்து, இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 158 ரன்கள் வெற்றி இலக்காக இலங்கை அணி, நிர்ணயித்துள்ளது.