Sydney: சிட்னியில் இந்திய வீரர்களுக்கு ஆறிப்போன உணவு வழங்கிய ஐசிசி.!

ஆஸ்திரேலியாவில், இந்திய அணிக்கு உணவு சரியாக வழங்கப் படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய தனது முதல் போட்டியில் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் நெதர்லாந்தை எதிர்த்து சிட்னி மைதானத்தில் நாளை விளையாடுகிறது. இதற்காக சிட்னி சென்றுள்ள இந்திய அணி, அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் வீரர்களுக்கு சாண்ட்விச் மட்டுமே உணவாக வழங்கப்பட்டது. மேலும் ஆறிப்போன உணவுகளை மற்றும் குறைவாகவே உணவுகளை வழங்குவதாக வீரர்கள் புகார் அளித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment