#T20 World Cup 2022: டாஸ் வென்று இங்கிலாந்து பௌலிங், மழையால் ஆட்டம் பாதிப்பு.!

டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி, முதலில் பௌலிங் செய்து விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நடைபெறும் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணி, டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (C & W), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், மொயின் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்

அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (C), லோர்கன் டக்கர் (W), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், ஃபியோன் ஹேண்ட், பாரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில்

1.3 ஓவர் முடிவில் அயர்லாந்து அணி, 11/0 என்ற ரன்களில் விளையாடிக் கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்போது தடைப்பட்டிருக்கிறது.

author avatar
Muthu Kumar

Leave a Comment