கோவை கார் விபத்து,! தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை.!

கோவை கார் வெடி விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-வை சேர்ந்த அதிகாரிகள் இன்று கோவைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார்.

காரை காவல்துறையினர், தடவியல் நிபுணர் குழுக்கள் சோதனை செய்ததில் காரில் 2 சிலிண்டர் வெடித்ததும் , காரில் இரும்பு ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் ஆகியவை இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், ஜமேஷ் முபின் வீட்டில் சோதனை செய்ததில் வெடி தயாரிக்கும் மூல பொருட்கள் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஜமேஷ் முபினுக்கு உதவியதாக 5 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் விசாரணையில்  இருக்கின்றனர்.

கோவை காவல்துறையினர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-வை சேர்ந்த அதிகாரிகள் இன்று கோவைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் வெடித்த இடம், முபின் வீடு என பல்வேறு இடங்களில் தனி தனி குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

தற்போது வரை இந்த வழக்கு தமிழக காவல்துறை வசமே இருக்கிறதாம். இன்னும் என்ஐஏ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படவில்லையாம். தற்போது வழக்கமான ஆய்வு பணிகளை தான் என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment