ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு இந்தியாவில் அதிக சொத்துடைய முதலமைச்சர்கள் பட்டியலில் முதலிடமும் , அதிக வழக்குகளுடைய முதலமைச்சர்கள் பட்டியலில் மகாராஷ்டிராவின் தேவேந்திர பட்னவிசும் முதலிடத்தில் உள்ளனர்.
ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் என்ற அமைப்பு, மாநில முதலமைச்சர்களின் சொத்து விவரம் மற்றும் அவர்கள் மீதான வழக்குகளை பட்டியலிட்டுள்ளது. அதில், 177 கோடி ரூபாய் சொத்துகளுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடத்திலும், 129 கோடி ரூபாய் சொத்துகளுடன் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு 2வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் 26 லட்சம் ரூபாய் சொத்துகளுடன் திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் கடைசி இடத்தில் உள்ளார். அதேபோல், அதிக வழக்குகளை கொண்ட முதலமைச்சர்கள் பட்டியலில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் மீது 22க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது 11 வழக்குகள் இருப்பதாகவும், ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.