கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார் சுரேஷ் ரெய்னா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! பின்னணி என்ன.?

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா, தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்து விட்டார். 

கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து உடனடியாக தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா.

இருந்தும் இவர்கள் இருவரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்களில் விளையாடி வந்தனர். இந்நிலையில், தற்போது அந்த உள்ளூர் தொடர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூட இவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டதன் பின்னணியில் சில தகவல்கள் உலா வருகின்றன. அதாவது, இந்திய சர்வதேச, உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று இருப்பவர்கள், வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க அனுமதி இல்லை.

அதன் காரணமாக தான் சுரேஷ் ரெய்னா இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்று, வெளிநாட்டு உள்ளூர் தொடர்களில் வீரராகவோ, அல்லது ஆலோசகராகவோ பங்கேற்க வாய்ப்புள்ளது என்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment