திடீரென்று ரத்தானது சோனியா காந்தியின் பரப்புரை

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ,பாஜக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து உள்ளது.தற்போது அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஹரியானா மாநிலம் மகேந்தரகரில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது  சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் சோனியா காந்திக்கு பதில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.