முன்னாள் எம்பி மஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பம்.. 5 பேரை பிடித்து விசாரணை!

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரிடம் காவல்துறை விசாரணை என தகவல்.

மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணை தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்தான் மரண வழக்கில் 5 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

முன்னாள் எம்பி மஸ்தான் கடந்த 22ம் தேதி காரில் சென்றபோது நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தற்போது 5 பேரை பிடித்துச்சென்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் ஓட்டுநர் உட்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment