சமையல் குறிப்பு புத்தகங்களை கூட விற்க முடியாது! – மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆவேசம்!

  • சென்னையில் அண்மையில் புத்தக கண்காட்சி விழா நடைபெற்றது. அதில் அரசுக்கு எதிராக புத்தகம் விற்றதாக பத்திரிக்கையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். 
  • இது குறித்து தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்துக்களை தெரிவித்து விழாவில் பாதியில் வெளியேறினார்.  

அண்மையில் சென்னை நந்தனத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டிருந்தது. அதில், அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனை செய்ததாக கூறி , பத்திரிக்கையாளர் அன்பழகன் வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ‘கீழடி ஈரடி’ எனும் தலைப்பில் உரையாற்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான எழுத்தாளர் சு.வெங்கடேசன் அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடையில் பேசுகையில், நான் கீழடி ஈரடி பற்றி பேசப்போவதில்லை என கூறினார். மேலும், பபாசியின் நடவடிக்கை கருத்துரிமைக்கு எதிரானது. கருத்து சுதந்திரத்தை காவு கொடுக்கக்கூடாது.

அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக்கூடாது என்றால், சமையல் குறிப்பு புத்தகம் கூட விற்கக்கூடாது. ஏனென்றால், அதில் வெங்காயம் பற்றி இருக்கிறது. அதே போல உப்பு பற்றியும் இருக்கிறது. அது மாநில அரசுக்கு எதிரானது. என கருத்து  தெரிவித்தார். அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக்கூடாது என்றால், காந்தி, அண்ணா, அம்பேத்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்களை கூட விற்கக்கூடாது. என தனது அதிருப்தியை தொடர்ந்து வெளியிட்டு, விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.