மதுரை மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சக மாணவரின் விரல்களை துண்டித்த கொடூரம்!

மாணவர் ஒருவரின் விரல்கள் மேலூர் அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் துண்டாகின.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஆர்ஜூன் என்ற மாணவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கும், இதே பள்ளியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவர் அர்ஜூனிடம், கார்த்திக் ராஜாவும், அவரது நண்பர் சரவணன் என்பவரும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

தகராறு முற்றவே, மறைத்து வைத்திருந்த கத்தியால், அர்ஜூனை கார்த்திக் ராஜா பலமாக தாக்கியுள்ளார். இதில் மாணவர் அர்ஜூனின் 2 விரல்கள் துண்டானது.
இதனை அடுத்து, சிகிச்சைக்காக முதலில் மேலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ந்த சம்பவம் குறித்து மேலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment