பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயிலின் மீது கல்வீச்சு..!

பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயிலின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்

பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயிலின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சோதனை ஓட்டத்தின் போது நடந்த இந்த தாக்குதலில் 2 கண்ணாடி ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளது.

இந்த விவகாரத்தில், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு இந்த சேவை தொடங்கப்படவுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மீது தொடர் கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment