சென்னையில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கம்

நோய்த் தாக்குதல்களுக்கு உள்ளாகும் கால்நடைகளுக்கு வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில்   அம்மா ஆம்புலன்ஸ் திட்டம்  தொடங்கப்படும் என்று கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை  ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி இந்த திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.1962 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் கால்நடைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.