ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 125 ரன்கள் எடுத்துள்ளது.
இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தடுமாற்றத்தை கண்டு தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இவர்களை தொடர்ந்து வந்த கிறிஸ் கெய்லும் நினைத்தபடி விளையாடவில்லை. 14 ரன்களிலேயே வெளியேறினார்.
அதேபோல் ஐடன் மார்க்ரம் 32 பந்துகளில் 27 ரன்கள் அடித்து அவுட்டானார். இதுவே அதிகபட்ச தனிநபர் ரன்னாகும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பூரான் மற்றும் தீபக் ஹூடா வழக்கம்போல் ஒரு சில ரன்கள் மட்டுமே அடித்து விக்கெட்டை இழந்தனர்.
ஹைதராபாத் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், பஞ்சாப் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து, இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது. ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…