பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக பாதை – அமைச்சர் கே.என்.நேரு!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை ஓரத்தில் கால் நனைக்கும் விதமாக நிரந்தரமாக நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதே போல பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடற்கரைக்கு செல்வதற்கு ஏதுவாக நடை பாதை அமைக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்த நடைபாதை ஒரு கோடி மதிப்பில் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Rebekal