#BREAKING: எஸ்ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், மேலும் 10 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு ( Sub Inspector ) விண்ணப்பிக்க வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. காவல் உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் 10 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இணையதள தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை முதல் விண்ணப்பம் பதிவேற்றுவதில் பிரச்சனை இருந்து வந்ததால், அவக்சம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. எனவே, இந்த பணிக்காக விண்ணப்பிக்க செய்ய விரும்புவோருக்கு இந்த கால அவகாசம் நீட்டிப்பு என்பது மகிச்சியளிக்கக்கூடிய விஷயமாகும். தமிழகம் முழுவதும் 444 எஸ்ஐ பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்