ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தால் மூன்று போட்டியிலும் தோல்வியடைந்த தென் ஆப்ரிக்கா

இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோதியது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் தென் ஆப்ரிக்கா அணியின் தொடக்க வீரர்களான குவின்டன் டி காக், ஹாஷிம் அம்லா இருவரும் களமிறங்கினர்.இருவரும் ஆட்டம் தொடக்கத்திலே குவின்டன் டி காக் 10 ரன்னில் , ஹாஷிம் அம்லா 6 ரன்னில் வெளியேறினர்.  இறுதியாக 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர். தென்ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 228 ரன்கள் இலக்குடன் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷிகார் தவான் ,ரோஹித் சர்மா களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் 8 ரன்களில் ஷிகார் தவான்  விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய கோலி 18 ரன்னிலும் ,ராகுல் 26 ரன்னிலும் வெளியேறினார். பின் களமிறங்கிய தோனி உடன் கூட்டணியில் நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் அடித்தார்.
இறுதியாக இந்திய அணி 47.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மேலும் தென் ஆப்ரிக்கா அணி விளையாடிய மூன்று போட்டியிலும் தோல்வியடைந்தது.

author avatar
murugan