நேருவின் 134வது பிறந்தநாள்.! சோனியாகாந்தி, மல்லிகார்ஜுனா கார்கே மரியாதை.!

மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14 ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவரது 134வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்தநாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment