கஸ்தூரிக்கும் விஜய் டீவிக்கும் இடையிலான சம்பள பிரச்சினை சால்வ்!

கஸ்தூரிக்கும் விஜய் டீவிக்கும் இடையிலான சம்பள பிரச்சினை முடிந்துவிட்டதாக கஸ்தூரி பதிவு.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது வருடமாக இந்த ஆண்டும் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சீசனில் நடிகை கஸ்தூரி அவர்கள் போட்டியாளராக இடையில் வந்து கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தனக்கு விஜய் டிவியால் வரவேண்டிய சம்பளம் இன்னும் வந்து சேரவில்லை என கஸ்தூரி அண்மையில் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கு விஜய் டிவியும் பதில் அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது விஜய் டிவி தனக்கு தரவேண்டிய பாக்கி சம்பளத்தை தந்து விட்டதாக தற்போது கஸ்தூரி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் லேட்டாக கிடைத்தாலும் தீபாவளி செலவுக்கு ஆகும் என நக்கலாகவும் பதிவிட்டுள்ளார்.

author avatar
Rebekal