கூட்டணி கட்சியினருடன் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்- திமுக..!

உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி, சுமூக முடிவு செய்திட வேண்டுமென திமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார்.

இந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி செப்டம்பர் 22-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன், உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்து பேசி, சுமூக முடிவு செய்திட வேண்டுமென மாவட்டக் கழகச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan