பிரபல பாடகிக்கு பாலியல் தாக்குதல் …

பிரபல  பாடகி சின்மயி எப்போதும் எல்லா விஷயங்களையும் தைரியமாக பேசக்கூடியவர். இவர் தமிழை தாண்டி பல மொழிகளிலும் பாடல்கள் பாடி உள்ளார் .

பாடகி சின்மயி தற்போது தன்னுடைய சமூக வலைதளங்களில் ஒரு பதிவு செய்து அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார். வெகு காலத்திற்குப் பிறகு நேற்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன் என்று கூறியுள்ளார்.

இதில் எனக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், பல ஆண்களும்-பெண்களும் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கதையை பகிர்ந்தார்கள். அதில், ஆசிரியர்கள், சகோதர்கள், தாத்தா-பாட்டிகள், உறவினர்கள், சக பயணிகள் என நெருங்கிய நபர்கள் தான் இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக உள்ளனர் என்பதுதான் என்று பதிவு செய்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment