சிக்கிம் விபத்து: 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி, அரசு வேலை – உ.பி அரசு அறிவிப்பு

சிக்கிம் விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி மற்றும் வேலை வழங்கப்படும் என அறிவிப்பு.

சிக்கிமில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்த விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே, வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் நேற்று ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.  டிரக் சரிவில் தவறி விழுந்த விபத்தில் 16 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment