திட்டமிட்டு நடத்தப்பட்ட ஷின்சோ அபே படுகொலை… வெளியான திடுக்கிடும் உண்மை…

பல துப்பாக்கிகளை சோதனை முயற்சியாக தயார் செய்து, பல தோட்டாக்கள் கொண்டு சுட்டு பயிற்சி எடுத்து தான், ஷின்சோ அபேவை கொலைகாரன் சுட்டு கொன்றுள்ளான் என்பது உறுதியாகியுள்ளது. 

சில தினங்களுக்கு முன்னர் உலகை அதிர வைத்த சம்பவம் என்றால் அது ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு நபரால் சுட்டு கொல்லப்பட்டது தான்.

சம்பவ இடத்திலேயே அந்த கொலையாளியை பாதுகாவலர்கள் மடக்கி பிடித்துவிட்டனர். அவனிடம் விசாரிக்கும் போது, ஏதோ மதபோதகரை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் வந்திருந்ததாகவும், தவறுதலாக ஷின்சோ அபேவை சுட்டு கொன்றதவும் கூறியுள்ளான் அந்த கொலைகாரன்.

ஆனால், அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியபோது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியில் தெரிந்துள்ளது. இதற்காக பல துப்பாக்கிகளை சோதனை முயற்சியாக தயார் செய்து, பல தோட்டாக்கள் கொண்டு சுட்டு பயிற்சி எடுத்துள்ளான்.

அதே போல, அந்த கொலைகாரன் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் பயிற்சி செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு சுவற்றில் துப்பாக்கி குண்டு ஏற்படுத்திய துளைகள் இருந்துள்ளன. இதனையெல்லம் கொண்டு, இந்த கொலையை பல நாட்களாக திட்டம் தீட்டிதான் செய்துள்ளான் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment