பாலிவுட் சென்ற ஷாலினி பாண்டே! நீதிமன்றம் சென்ற கோலிவுட் தயாரிப்பாளர்!

  • மூடர்கூடம் நவீன் இயக்கும் புதிய படம் அக்னி சிறகுகள்.
  • இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் தற்போது அவர் படத்திலிருந்து விலகியுள்ளாரம். 

மூடர்கூடம் படம் மூலம் கவனம் ஈர்த்த நவீன் இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் அருண் விஜய்யும், விஜய் ஆண்டனியும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி சிவா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியிருந்தார். அவரது காட்சிகள் 20 நாட்களுக்கும் மேலாக படமாக்கப்பட்டன. அதற்கு பிறகு அவருக்கு பாலிவுட் வாய்ப்பு வர அவர் பாலிவுட் சென்று விட்டாராம். அங்குள்ள பாலிவுட் சூட்டிங்கிற்கு சென்றுவிட்டாராம்.

இதனால் பட தயாரிப்பாளர் சிவா தற்போது நீதிமன்றத்தில் புகார் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்று படத்தில் நடித்து தரவேண்டும். அல்லது வாங்கிய தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.