பாலியல் தொல்லை – திருச்சி பேராசிரியர் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தாக திருச்சி பிஷப் ஷிபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் கைது. 

மாவட்ட சமூக நல அலுவலர் புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் திருச்சி பிஷப் ஷிபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகனை கைது செய்துள்ளனர்.  தமிழ்த்துறை தலைவரான பால் சந்திரமோகன் பாலியல் தொல்லை தந்ததாக மாணவிகள் புகார் அளித்திருந்தனர். புகார் குறித்து கல்லூரி சென்று மாணவிகளிடம் சமூக நல அலுவலர் தமிமுன் நிஷா விசாரணை நடத்தியிருந்தார்.

பாலியல் தொல்லை புகாரை தொடர்ந்து தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்ட்டுள்ளதை அடுத்து, இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்