செந்தில் பாலாஜியின் காவல் 31ஆவது முறையாக நீட்டிப்பு!

Senthil balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 31ஆவது நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி அமலாத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதன்பின் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் ஜாமீன் கோரி பல முறை மனு தாக்கல் செய்தும் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தது, தற்போது உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து வருகிறது.

இதனிடையே, செந்தில் பாலாஜி தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் பட்சத்தில், மேலும் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 31ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்