சென்செஸ் 255 புள்ளிகள் உயர்வு..!

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 70 புள்ளிகள் அதிகரித்து 15, 924 புள்ளியில் நிறைவு பெற்றது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்தது. இதனால், 51,189 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 70 புள்ளிகள் அதிகரித்து 15, 924 புள்ளியில் நிறைவு பெற்றது. நண்பகல் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்ந்து 53,266 புதிய உச்சம் தொட்டு இறங்கியது.

எச்.சி.எல் டெக் பங்கு 5 %, எல்.அண்.டி 4%, டெக் மகிந்திரா பங்கு 3% , எச்டிஎஃப்சி வங்கி பங்கு 1.6 சதவீதம், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி பங்குகள் தலா ஒரு சதவீதமும் விலை உயர்ந்தது. ஆக்சிஸ், ஐசிஐசிஐ, எஸ்பிஐ இன்டஸ் இன்ட் ஆகிய வங்கிகள் பங்குகளும் விலை உயர்ந்து வர்த்தகம் ஆகின.

author avatar
murugan