13 பேருடன் மாயமான இந்திய விமானப்படையின் விமானம் !தேடுதல் பணி தீவிரம்

காணாமல்போன இந்திய விமானப்படையின் ஏ.என் -32 விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு  இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5  பயணிகளுடன் சென்றனர்.பின் அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனது.

இந்நிலையில்  காணாமல்போன இந்திய விமானப்படையின் ஏ.என் -32 விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .ஆளில்லா ராணுவ விமானம், இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகாப்டர்கள் மூலம் அருணாசலப் பிரதேசம்-அசாம் இடையே தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.