மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நல்லக்கண்ணு உடல் நலம் குறித்து சீமான் ட்வீட்.!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் கூறுகையில், சாதாரணக் காய்ச்சல் தான் என்றும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறினார்.

இதற்கிடையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணுவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அந்த பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், இம்மண்ணின் அரசியல் அறத்திற்கு நிகழ்காலச் சான்றாகவும் எளிமையின் வடிவாகவும் திகழும் பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வருகிறார் என்ற செய்தி ஆறுதலைத் தருகிறது. ஐயா விரைந்து முழுமையான நலம்பெற விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.