இன்று பள்ளிகள் திறக்கப்படாது ! ஜூன் 10ம் தேதி திறக்கப்படும்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்து உள்ளது.இதனால் மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் பல இடங்களில் கோடை வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.ஆனால் தமிழக அரசு அனைத்து  பள்ளிகளும் இன்று  உறுதியாக திறக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில்  கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் புதுச்சேரியில் இன்று (ஜூன் 3-ம் தேதி)திறப்பதற்கு  பதில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று  முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.