பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-வரை மூடல் மத்திய அரசு.!

கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் 4-ம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம்  தற்போது அறிவித்துள்ளது.

அதில், செப்டம்பர் 30-வரை பள்ளி, கல்லூரிகள்  மூடப்பட்டிருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், 9 முதல் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம், ஆனால், அது  கட்டாயமல்ல எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

author avatar
murugan