கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு ரத்து -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வந்த வண்ணமே இருந்தது.

இதனால் கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதி ரத்து செய்து  உத்தரவு பிறப்பித்தது. இதற்குஇடையில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,புதுச்சேரி அரசின் அன்றாட பணிகளில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு அளித்துள்ளது.