#SAvIND: 2வது ஒருநாள் போட்டி – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதலில் 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பார்ல் நகரில் விளையாடுகிறது. இன்று நடைபெறும் இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது. இதனால் இப்போட்டியில் அனல்பறக்கும் ஆட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா (பிளேயிங் லெவன்): கேஎல் ராகுல்(கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்): குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஜன்னெமன் மலான், டெம்பா பவுமா(கேப்டன்), ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, சிசண்டா மகலா, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்