ஏன்டா போறேன்னு இருக்கு.! வருத்தத்துடன் வீடியோ வெளியிட்ட சந்தோஷ்.!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 2 வாரத்திற்கு ஒருமுறை எலிமினேஷன் அரங்கேறி வருகிறது. அதன்படி இதுவரை போட்டியில் இருந்து ராகுல் தாத்தா, மனோ பாலா, அந்தோணிதாசன் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இப்படி இருக்கையில், தற்போது 7 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் உள்ளன. அதிலிருந்து ஒருவர், இந்த வாரம் வெளியேற போகிறார் என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. யார் இந்த வாரம் வெளியேற போகிறார் என்ற கவலை ரசிகர்களுக்குக்கு இருந்தது. அதன்படி, நேற்றைய எபிசோடியில் சந்தோஷ் பிரதாபி குறைவான மதிப்பெண்கள் பெற்று போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறியதனால் அங்கிருந்த போட்டியாளர்களும் ரசிகர்களும் காவலடைந்தனர்.

cook with comali santhosh cry

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சந்தோஷ் பிரதாப் வருத்தத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் “ரொம்ப நாள் கழித்து சிறிய வயதில் ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி போகும்போது ஏண்டா போகலாம்னு இருக்கும் அந்த மாதிரி இப்ப குக் வித் கோமாளி-யிலிருந்து செல்வது அப்படித்தான் இருக்கு.

இன்னொன்னு சந்தோஷமாகவும் இருக்கிறது. நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் என்னுடைய குடும்பத்தினர் மாதிரி அவங்க எல்லாரும் இருக்காங்க நல்லா சமைக்க போறாங்க அந்த ஒரு சந்தோஷம் இருக்கிறது.  என்னால் யாரும் வெளியே செல்லவில்லை. என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி, உங்களையும் குடும்பத்தினராக தான் பார்க்கிறேன். எனக்கு ஷூட்டிங் இல்லை என்றால் கண்டிப்பாக வைல்ட் கார்டு மூலம் திரும்பி வருவேன். அப்படி இல்லையென்றால், படத்தில் நடித்து உங்களை பெருமை படுத்துவேன் ” எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.