#BREAKING :மாநகராட்சி, நகராட்சிகளில் சலூன்கள் இயங்க அனுமதி இல்லை..!

நாளை மறுநாள் முதல் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள்  இயங்காது.

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அதிகரித்து வரும் கொரோனாவை  கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்து வரும்நிலையில் தமிழக அரசு நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக  ஏப்ரல் 26-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Spas, Saloons, Barber shops) இயங்க அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

author avatar
murugan