RRvsRCB: அதிரடி காட்டிய டு பிளெசிஸ், மேக்ஸ்வெல்..! ராஜஸ்தான் அணிக்கு இதுவே இலக்கு..!

ஐபிஎல் தொடரில் இன்றைய RR vs RCB போட்டியில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 171/5 ரன்கள் குவித்துள்ளது.

16-வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளதால் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதன்படி, பெங்களூரு அணியில் முதலில் களமிறங்கிய விராட் கோலி மற்றும் டு பிளெசிஸ் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். விராட் கோலி பொறுப்பாக விளையாடிய நிலையில் 18 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து, களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடிய நிலையில், டு பிளெசிஸ் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, பெங்களூரு அணியில் களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர். ஆனால், அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து விளாசினார். முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்துள்ளது.

இதில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 55 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும், அனுஜ் ராவத் 29* ரன்களும் குவித்துள்ளனர். ராஜஸ்தான் அணியில் ஆடம் ஜம்பா, கே.எம்.ஆசிப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.